எகிப்து தேசத்திற்கு பல ஆராய்ச்சியாளர்கள் அணிவகுத்து செல்கின்றனர். தோண்டத்தோண்ட சுரங்கத்தில் தங்கம் கிடைப்பதைப் போல இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும்  பிரமிடுகளில் கல்லறைகளும், மம்மிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
	மர்மங்கள் நிறைந்த எகிப்தில் வரலாறு ஆராய்வாளர்களுக்கு உள்ள ஆர்வம் எப்போதும் குறையாது என்பது  தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் கெய்ரொவில் உள்ள ஒரு பிரமிடில் பதப்படுத்தி வைக்கப்பட்ட புகழ்பெற்ற மதகுருவின் கல்லறையை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
	 
	இதன் மூலம் அக்காலத்தில் நிலவிய கலாச்சாரத்தையும், வேறு சிலரைப் பற்றிய விவரங்களும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் என தெரிகிறது.