அனிதாவுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் அமெரிக்க தமிழர்கள்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (06:23 IST)
தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களது ஆதரவை வெளிக்காட்ட தயங்குவதில்லை. இதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போன்ற பிரச்சனையின்போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் ஆதரவு கொடுத்தனர். அதேபோல் நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்க முடியாத மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு ஆதரவாக அமெரிக்க தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



 
 
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களான நியூஜெர்சி, மிக்சிகன், அட்லாண்டா, கலிபோர்னியா, சிகாகோ, புளோரிடா போன்ற பல நகரங்களில் வாழும் தமிழர்கள், அனிதா மரணத்துக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மத்திய பா.ஜ.க அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிராக அவர்கள் போட்ட கோஷம் அமெரிக்காவையே உலுக்கியது.
 
அதுமட்டுமின்றி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தமிழர்களிடம் கையெழுத்து அதை இந்திய தூதரிடம் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க தமிழர் ஒருவர் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments