Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத கும்பலை வேட்டையாடும் தாலிபான்! – ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (08:29 IST)
ஆப்கானிஸ்தானில் டேயிஷ் பயங்கரவாத கும்பல் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அங்கு வெவ்வேறு பயங்கரவாத கும்பல்களின் உள்ளீடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஐ.எஸ் மற்றும் அதை சார்ந்த சில பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்த திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காபூல் நகரில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்த சம்பவத்தில் 12 பேர் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாலிபான்கள் மற்ற பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று தாலிபான்கள் டேயிஷ் எனப்படும் பயங்கரவாத அமைப்பின் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments