Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெற்றிக்காக காத்திருப்பு! – 10 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தான் வந்த தலீபான் தலைவர்!

Advertiesment
வெற்றிக்காக காத்திருப்பு! – 10 ஆண்டுகள் கழித்து ஆப்கானிஸ்தான் வந்த தலீபான் தலைவர்!
, புதன், 18 ஆகஸ்ட் 2021 (16:51 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் தலீபான் அமைப்பை உருவாகியவர்களில் முக்கிய தலைவர் ஆப்கானிஸ்தான் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பல நாட்டு மக்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற ஆயத்தங்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை ஆதரிப்பதாக சீனா, ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக ஆப்கானிஸ்தானை விட்டு தப்பி மறைந்திருந்த தலீபான் அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான முல்லா அப்துல் கனி பராதர் ஆப்கானிஸ்தானிற்குள் வந்துள்ளார். கந்தகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு தலீபான்கள் உற்சாக வரவேற்பு அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் வருகையை தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் புதிய அரசு மற்றும் அமைச்சரவை குறித்த அறிவிப்புகள் எந்நேரமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிக்கூடத்தில் திடீர் தீ விபத்து! – புத்தகங்கள், சீருடைகள் எரிந்து நாசம்!