Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுக்கடலில் ஈரானின் 3 கப்பல்கள் பற்றி எரிகிறதா? ஓமன் வளைகுடாவில் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 17 ஜூன் 2025 (11:53 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில்   மூன்று கப்பல்கள் தீப்பிடித்து எரிவது போல காட்சிகள் உள்ளன. எனினும், இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை.
 
இதற்கிடையே, நாசாவின் 'ஃபயர் இன்ஃபர்மேஷன் ஃபார் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்'  வரைபடம் கூட ஓமன் வளைகுடாவில் மூன்று இடங்களில் தீப்பற்றியிருப்பதை உறுதிப்படுத்துவது போல தெரிகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
உலகில் பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கடந்த மாதம் வரை, ஒரு நாளைக்கு சுமார் 1.78 கோடி முதல் 2.08 கோடி பேரல் கச்சா எண்ணெய், கண்டன்சேட் மற்றும் எரிபொருட்கள் இந்த ஜலசந்தி வழியாகச் சென்றுள்ளதாக வோர்டெக்ஸா (Vortexa) தரவுகள் தெரிவிக்கின்றன.
 
இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அல்லது ஹோர் ஃபக்கான் கொள்கலன் முனையத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜி7 மாநாட்டிலிருந்து ட்ரம்ப் அவசர வெளியேற்றம்: மத்திய கிழக்கு பதற்றம் காரணமா?

15 வயது சிறுவனை கடத்திய விவகாரம்: ஏடிஜிபி ஜெயராமன் சஸ்பெண்ட்..!

பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் பொதுச்செயலாளர் பதவியை ஈபிஎஸ் இழப்பார்: கே.என்.நேரு

முருகன் இருக்கும் இடமெல்லாம இந்துக்களுக்கு சொந்தம்.. அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி..!

நீலகிரியில் தொடர் கனமழை.. சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments