வார்த்தைய அளந்து பேசுங்க! இந்தியர்களை கீழ்தரமாக பேசிய செனட்டர்! வெடித்து எழுந்த ஆஸ்திரேலிய பிரதமர்!

Prasanth K
செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (13:32 IST)

ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயரும் இந்திய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக செனட்டர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

 

உலகம் முழுவதும் இந்திய மக்கள் பலர் பல்வேறு பணிகளுக்காக பயணிக்கும் நிலையில் அனுமதிக்கும் நாடுகளில் குடியேறவும் செய்கின்றனர். அவ்வாறாக ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பலர் குடியேறியுள்ளனர். இந்நிலையில் இந்திய மக்கள் குடியேற்றம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய பெண் செனட்டர் ஜெசிந்த ப்ரைஸ், இந்தியாவிலிருந்து ஏராளமானோரை ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிப்பதன் மூலம் ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியும், பிரதமர் அல்பானிஸும் தங்களுக்கு ஆதரவான சமூக ஓட்டுகளை அதிகரிக்கின்றனர் என்றும், நாட்டின் வேலைவாய்ப்பு, வாழும் தரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும் பேசியிருந்தார்.

 

அவரது இந்த பேச்சுக்கு அவரது சொந்த கட்சியான வலதுசாரி கட்சியை சார்ந்தவர்களே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். செனட்டர் ப்ரைஸ் தவறான நோக்கத்தில் அப்படி பேசவில்லை என்றாலும் கூட இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments