Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கர சூறாவளி.. 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம்..

Mahendran
திங்கள், 14 ஏப்ரல் 2025 (10:14 IST)
சீனாவில் பயங்கர சூறாவளி வீசி கொண்டிருப்பதை அடுத்து, 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பீஜிங் உட்பட சில நகரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்று காரணமாக மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பீஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் வந்து சேர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன என்றும், வாகனங்கள், கடைகள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 50 கிலோ எடைக்கும் குறைவானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே வரவேண்டாம் என்றும் சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments