Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதியை மீறியதாக கூகுள் நிறுவனத்திற்கு 3.42 லட்சம் கோடி ரூபாய் அபராதம்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (22:18 IST)
உலகின் நம்பர் ஒன் சியர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இணைய உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வரும் கூகுள், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக ஆண்ட்ராய்ட் அமைப்பை விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் காரணமாக சமீபத்தில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் ஆண்ட்ராய்ட் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்ததாகவும் புகார் எழுந்தது
 
இந்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. இதன்படி கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக $5000 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.3.42 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கூகுளின் இந்த சட்டவிரோத செயல்பாடு இன்றிலிருந்து 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என்றும் இல்லையேல் மேலும் மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments