நியூசிலாந்து நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
	 
	நியூசிலாந்து நாட்டில் கெர்மடெக் தீவுகளில்  இன்று காலை 6.11 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இதுகுறித்து, தேசிய நீல அதிர்வு மையம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இன்று காலை கெர்மடெக் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
 
									
										
			        							
								
																	எம்7.1 கெர்மடிக் தீவுகளில் நில நடுக்கத்தைத் தொடர்ந்து,  நில நடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி அட்சரேகை -29.95 ஆகவும், தீர்க்கரேகை 178.02 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் நில நடுக்கமானது நியூசிலாந்தின் கெர்மெடிக் தீவுகளில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் கூறியுள்ளது.