Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

Advertiesment
பாகிஸ்தான் சூப்பர் லீக்

Mahendran

, வியாழன், 24 ஏப்ரல் 2025 (19:13 IST)
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பணியாற்றி வரும் இந்திய ஒளிபரப்புக் குழுவை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஜம்மு-காஷ்மீரின்  பஹல்காம் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் உயிரிழந்தது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உடனடி பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் அதிகப் பாதுகாப்பு நிலையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சில இருநாட்டு ஒப்பந்தங்களும் இடைக்காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்காக பணியாற்றி வந்த 20க்கும் மேற்பட்ட இந்திய ஒளிபரப்பு தொழில்நுட்ப நிபுணர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோரையும் நாடு திரும்ப செய்ய பாகிஸ்தான் அரசு தீர்மானித்துள்ளதாகவும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
அவர்களில் ஒளிபரப்புக் குழு பொறியாளர்கள், தயாரிப்பு மேலாளர்கள், கண்காணிப்பு நிபுணர்கள் ஆகியோரும் அடங்குகிறார்கள்.
 
மேலும், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அங்கு உள்ள அனைத்து இந்தியர்கள் வரும் 48 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?