Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதி மசூத் அசார் குடும்பத்திற்கு ரூ.14 கோடி நிதியுதவி.. பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்?

Siva
புதன், 14 மே 2025 (17:03 IST)
சமீபத்தில், இந்தியாவின் தாக்குதல் காரணமாக தீவிரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 14 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரண நிதியாக பாகிஸ்தான் அரசு 14 கோடி ரூபாய் அந்த குடும்பத்திற்கு வழங்க ஒப்புதல் வழங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா நடத்திய "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில், தீவிரவாதி மசூத் அசார் தப்பியிருந்தாலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, அவர்களது உறவினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம், மொத்தமாக 14 கோடி ரூபாய் வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தீவிரவாதி பட்டியலில் உள்ள மசூத் அசாரின் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய தொகை வழங்கப்படுவது, சர்வதேச அளவில் பெரும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
 
தற்போது, மசூத் அசாரின் குடும்பத்தில் அவர் ஒருவர் மட்டுமே உயிரோடிருப்பதால், இந்த 14 கோடி ரூபாயும் அவருக்கே செல்ல வாய்ப்புள்ளதாகவும், இதன் மூலம் தீவிரவாதம் மேலும் வளர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுவது புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments