Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

Advertiesment
IPL vs PSL

Prasanth Karthick

, புதன், 14 மே 2025 (09:05 IST)

போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அதேநாளில் பிஎஸ்எல் போட்டிகளையும் தொடங்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

 

இந்தியாவில் ஐபிஎல் டி 20 போட்டிகள் நடைபெறுவது போல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பிஎஸ்எல் என்ற டி20 சீசனை நடத்தி வருகிறது. தற்போது இந்த போட்டிகள் நடந்து வந்த நிலையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக இரு நாடுகளிலுமே போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.

 

தற்போது போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளை வரும் 17ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்த பிசிசிஐ அதற்கான புதிய கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்த பிஎஸ்எல் போட்டிகளை அதே 17ம் தேதி தொடங்க உள்ளது. அதில் இன்னும் 8 போட்டிகள் நடக்க உள்ளன. ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள திரும்ப வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் அதில் சமீபத்தில் ப்ளேயர் ஆப் தி மேட்ச் வென்ற வீரருக்கு வெறும் ஹேர் ட்ரையரை அவர்கள் பரிசாகக் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!