Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருவை காணோம் சார்! புகார் கொடுத்த ஜி.பி.முத்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

Prasanth Karthick
புதன், 14 மே 2025 (16:30 IST)

சமூக வலைதளங்களில் பிரபலமான ஜி.பி.முத்துவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமானவர்களில் முக்கியமானவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி.முத்து தனி யூட்யூப் சேனல் தொடங்கி பிரபலமான நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் சமீபத்தில் ஜி.பி.முத்து தனது ஊரான உடன்குடி காவல்நிலையத்தில் நூதன புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது ஊரில் உள்ள கீழத்தெருவை காணவில்லை என அவர் புகார் அளித்திருந்தார். அங்குள்ள சிலரோடு அவருக்கு முட்டல் மோதல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சிலர் ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளனர்.

 

இதனால் ஜி.பி.முத்துவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments