Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடிபாடுகளை அகற்றும்போது இடிந்து விழுந்த கட்டிடம்.. துருக்கியில் மேலும் ஒரு சோகம்..!

turkey
, திங்கள், 6 மார்ச் 2023 (11:38 IST)
துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்பதும் இதில் 50,000 மேற்பட்ட ஒரு பலியாகினார் என்பதும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் துருக்கியில் உள்ள ஒரு கட்டிட த்தின் ஒரு பகுதி மட்டும் இடிந்திருந்த நிலையில் அந்த பகுதியில் இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடத்தின் இன்னொரு பகுதியும் இழந்து விழுந்ததால் இரண்டு பேர் அதில் சிக்கிக் கொண்டதாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் ஒருவரை காப்பாற்ற முயற்சியில் மீட்பு குழுவினர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
கட்டிட ஈடுபாடுகளை அகற்றும் போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் துருக்கி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடு, மாடு தவிர அனைத்தையும் வாக்காளர்களுக்கு கொடுத்தனர்: ஈரோடு தேர்தல் குறித்து ராஜேந்திர பாலாஜி..!