Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர்களை தடுக்கணும்னா.. அது மோடியால்தான் முடியும்! – மெக்சிகோ அதிபர் நம்பிக்கை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (14:36 IST)
உலக நாடுகளிடையே ஏற்படும் போர்களை தடுக்க இந்திய பிரதமர் மோடியால் முடியும் என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி பதவியேற்று 8 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் இந்த 8 ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் பயணித்து இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தியுள்ளார். மேலும் பல நாட்டு தலைவர்களையும் இந்தியாவிற்கு வரவேற்று பல்வேறு உடன்படிக்கைகளை ஏற்படுத்தியுள்ளார். இதனால் உலக அரங்கில் பிரதமர் மோடி மிகவும் செல்வாக்கு வாய்ந்தவராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி குறித்து பேசிய மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் “உலகில் போர்களை தடுத்து நிறுத்த இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட 3 உலகத் தலைவர்களை கொண்ட ஆணையத்தை உருவாக்கும் திட்டத்தை ஐ.நாவிடம் முன்மொழிய உள்ளேன். இவர்கள் மூவரும் வகுக்கும் திடங்கள் போர் மற்றும் பதற்ற சூழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஆழமாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments