Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களில் ஒரு கோடி தேசிய கொடி விற்பனை! – இந்திய தபால் துறை சாதனை!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (14:24 IST)
நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதை சிறப்பிக்கும் விதமாக இந்திய தபால் துறை 1 கோடி தேசிய கொடிகளை விற்பனை செய்துள்ளது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்டு 15 அன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடி ஆகஸ்டு 13 முதல் 15 வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை மாட்டி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் தேசிய கொடி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. தேசிய கொடிகள் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 1.45 லட்சம் தபால் அலுவலகங்கள் மூலம் கடந்த 10 நாட்களில் 1 கோடி தேசிய கொடிகள் விற்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ரூ.25 க்கு விற்கப்படும் இந்த கொடிகள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும் இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments