Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

Advertiesment
பாகிஸ்தான்

Siva

, ஞாயிறு, 15 ஜூன் 2025 (13:15 IST)
பாகிஸ்தானின் தேரா புக்டி பகுதியில் உள்ள சூய் நகருக்கு அருகில், பலூச் குடியரசு படை சூயிலிருந்து கராச்சிக்கு செல்லும் 36 அங்குல விட்டம் கொண்ட முக்கிய எரிவாயு குழாய் ஒன்றை தகர்த்துள்ளது. இந்த தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பலுசிஸ்தாபுப் இந்தத் தாக்குதல்,  பாகிஸ்தானின் மின்சார விநியோகத்தை துண்டிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூய் எரிவாயு களத்திலிருந்து எரிவாயு விநியோகத்தை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
எரிவாயு குழாய் வெடித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பெரும் தீப்பிழம்புகள் வானுயர எழுவதை காண முடிகிறது என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ள நிலையில் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!