Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

Advertiesment
தூத்துக்குடி

Siva

, ஞாயிறு, 15 ஜூன் 2025 (13:05 IST)
ஜூன் 15ஆம் தேதி பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த  போராட்டம், தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் நிலையில், இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பங்கேற்றார்.
 
தூத்துக்குடியில் இன்றைய கள் இறக்கம் போராட்டம் நடைபெற்ற நிலையில் அதில் நாம் தமிழர் கட்சியின் சீமான் கலந்து கொண்டு பனைமரம் ஏறி கல் இறக்கிய வீடியோ சமூகத்தில் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது
 
இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏற்கனவே  சீமான் பனைமரம் ஏறி கள் இறக்கும் பயிற்சியில் சில நாட்கள் ஈடுபட்டார். மேலும் "பனை மரத்தில் ஏற வேண்டாம்," என அவரது கட்சியினர் கூறியபோதிலும், "இந்த போராட்டத்தில் நான் பங்கேற்பதால் பனைமரம் ஏறுவேன், யாரும் பயப்பட வேண்டாம்," என்று அவர் கூறிய நிலையில் உண்மையிலேயே அவர் இன்று பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டார். 
 
கள் இறக்கும் தொழில், பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால், அரசு விதித்துள்ள தடைகளால், இந்த தொழில் நலிவடைந்து வருவதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். கள் இறக்கும் தொழிலை மீண்டும் சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாகும். சீமானின் இந்த செயல், தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
 
 
Edited by  Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி