Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிநவீன ஆயுதங்களை அனுப்பிருக்கேன்… சீண்டாதீங்க..! – ரஷ்யாவுக்கு ஜோ பைடன் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (09:01 IST)
உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதிபர் ஜோ பைடன் அதிநவீன ஆயுதங்களை உக்ரைனில் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷிய படைகள் உண்மையான விழைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments