இந்தியாவுக்கு வரி விதித்தது சரிதான்.. ஜெலன்ஸ்கி நீங்களுமா? - ட்ரம்புக்கு வக்காலத்து வாங்கும் உக்ரைன்!

Prasanth K
திங்கள், 8 செப்டம்பர் 2025 (15:34 IST)

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரி நியாயமற்றது என இந்தியா மட்டுமல்லாமல் சீனாவும் கூட கூறி வரும் நிலையில், அந்த முடிவு சரி என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரியும், பின்னர் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வணிகம் செய்து போருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி மேலும் 25 சதவீத வரியும் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். ஆனால் ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வணிகத்தை இந்தியா நிறுத்திக் கொள்ளவில்லை.

 

ரஷ்யாவுடனான வணிகத்தை நிறுத்தாவிட்டால் இந்தியா மீதான வரியை மேலும் அதிகரிப்பேன் என ட்ரம்ப் மிரட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியா மீதான வரிகள் குறித்து அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசியுள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. இதுகுறித்து பேசிய அவர் “ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அமெரிக்கா வரி விதித்தது சரியான நடவடிக்கை. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை நிறுத்த நினைக்கும் நாடுகள் அவர்களோடு வர்த்தகம் செய்யக் கூடாது” என பேசியுள்ளார்.

 

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து அமெரிக்கா செயல்படுவதால் அவர் அப்படி பேசியுள்ளார். ஆனால் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி சுத்திகரித்து தயாரிக்கும் டீசலை உலக அளவில் உக்ரைனே அதிக அளவில் வாங்கி வருகிறது. உக்ரைனின் பிரதான டீசல் விநியோகிக்கும் நாடான இந்தியா குறித்து ஜெலன்ஸ்கி இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் துயரத்திற்கு முதல்வர் எப்படி பொறுப்பாக முடியும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

இந்தியாவில் முதல்முதலாக தனியார் ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை! டாடா எடுக்கும் சூப்பர் முயற்சி..!

விஜய் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? அரசுக்கு அச்சமா? திருமாவளவன் கேள்வி..!

நடிகை ஷில்பா ஷெட்டி வெளிநாடு செல்ல கூடாது: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள்.. இந்தியாவை விட்டே போகிறோம்.. சென்னை நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments