Publish Date: Wed, 21 Jul 2021 (11:21 IST)
Updated Date: Wed, 21 Jul 2021 (11:24 IST)
உலகம் முழுவதும் அரசியல் தலைவர்களை உளவு பார்த்ததாக அதிர்ச்சியை ஏற்படுத்திய பெகாசஸ் விவகாரத்தில் பிரான்ஸ் விசாரணையை தொடக்கியுள்ளது.
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ தயாரிக்கும் பெகாசஸ் மென்பொருள் உலகம் முழுவதும் உளவு வேலைகளில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெயர் உட்பட 14 நாட்டு தலைவர்கள் பெயர் அடிபட்டுள்ளது. மேலும் பெகாசஸ் மூலமாக பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மெக்ரான் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விசாரணையை பிரான்ஸ் தொடங்கியுள்ளது.