Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் தென் கொரிய அதிபர் கிம் ஜாங் பில் மரணம்!

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (11:13 IST)
தென் கொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் பில் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 92.
கிம் ஜாங் பில் முதுமை சார்ந்த நோய்களால் சில வருடங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
 
இந்நிலையில், கிம் ஜாங் பில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சூன்சன்ஹியாங் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
மரணம் அடைந்த கிம் ஜாங் பில் 1971 - 1975ம் வருடம் மற்றும் 1998 - 2000ம் ஆகிய வருடங்களில் தென் கொரிய அதிபராக பதவி வகித்தவர். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments