Publish Date: Fri, 08 May 2020 (22:23 IST)
Updated Date: Fri, 08 May 2020 (22:50 IST)
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டுமென நீண்ட நாட்களாகவே மனித உரிமை ஆணையம் போராடி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள, ஓலாலெகான் சிறையில் இருந்தபடியே தனக்கான தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்து தன் வழக்கறிஞர் மூலம் வழக்காடி வந்தார்.
இந்நிலையில், கொரொனா வைரஸ் தாக்கம் காரணமாக ஜூல் செயலி மூலமாக வழக்கை அவர் எதிர்கொண்டனர். ஹமீது தன் தன் தரப்பு நியாயங்களை நீதிபதிகளிடம் எடுத்துரைத்தார்.
இதை விசாரித்து நீதீபதி ஹமீதுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.ஆனால் இதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இதில், ஜூலி செயலி மூலம் பெரிய வழக்குகளை எதிர்கொள்வது முறையல்ல என்றும், மரணதண்டனை விதிக்க காரணமில்லாமல் ஹைமீது உயிர் பறிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.