Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு மாளிகையில் இருந்து வெளியேறும் ராஜபக்சே.. மீண்டும் புரட்சி வெடிக்கும் என்ற பயமா?

Advertiesment
இலங்கை

Siva

, வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (08:22 IST)
இலங்கையில் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை ரத்து செய்யும் மசோதா, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டதை அடுத்து, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தனது அரசினர் மாளிகையை காலி செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கையானது, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும், மீண்டும் ஒரு மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மாளிகை, பாதுகாப்பு, மற்றும் பிற சலுகைகளை ரத்து செய்யுமாறு இலங்கை அரசு ஒரு புதிய மசோதாவை வெளியிட்டது.  இந்த மசோதாவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்சே சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டங்கள், ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவுகட்டின. அந்த போராட்டங்களின் விளைவாக, மஹிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.
 
தற்போது, நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், தனது மாளிகையை காலி செய்ய மறுத்தால், மீண்டும் ஒரு மக்கள் புரட்சி ஏற்படலாம் என்ற அச்சத்தில், அவர் உடனடியாக அரசினர் மாளிகையை காலி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி தாம்பரத்தில் இருந்து இல்லை.. மதுரை செல்லும் ரயில்கள் எங்கிருந்து கிளம்பும்?