Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்திலிருந்து விழுந்த லேண்டிங் கியர்! – 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பு?

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (15:46 IST)
கொலம்பியாவில் விமானத்திலிருந்து லேண்டிங் கியர் விழுந்த விவகாரத்தால் விமானங்கள் ரத்தான நிலையில் 21 ஆயிரம் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கொலம்பியாவில் உள்ள ஹோஸ் மரியா கர்டோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாத்தம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் லேண்டிங் கியர் கழன்று கீழே விழுந்துள்ளது.

இதனால் விமானம் மீண்டும் ஹோஸ் மரியா கர்டோவா விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. மிகுந்த பாதுகாப்புடன் விமானத்தை பத்திரமாக லேண்டிங் கியர் இல்லாமலே தரையிறக்கியுள்ளனர். இதனால் ரியோநிக்ரோ வழியாக செல்லும் விமானங்கள் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து, காலதாமதம் ஆகியுள்ளது.

சுமார் 136 விமானங்கள் ரத்தான நிலையில் 21 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

கூரியர் கொடுப்பது போல வந்து இளம்பெண் வன்கொடுமை! - அதிர்ச்சி சம்பவம்!

சாக்கடையில் இருந்த நாய்க்குட்டியை மீட்ட கபடி வீரர்.. காப்பாற்றியவரையே நாய் கடித்ததால் பரிதாப பலி..!

மேகாலயா தேனிலவு கொலையை பார்த்து கணவரை கொலை செய்த பெண்.. கள்ளக்காதலர் தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments