Publish Date: Thu, 17 Dec 2020 (08:30 IST)
Updated Date: Thu, 17 Dec 2020 (08:32 IST)
நிலவில் பாறைகள், மணல்களை சேகரிக்க சென்ற சீன விண்கலம் வெற்றிகரமாக மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது.
நிலவில் இருந்து பாறைகள், கற்களை சேகரித்து வந்து ஆய்வு செய்யும் திட்டத்தில் சீனா இறங்கியுள்ளது. இதற்காக கடந்த மாதம் 24ம் தேதி “சேஞ்ச்5” என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.
கடந்த 1ம் தேதி வெற்றிகரமாக நிலவில் இறங்கிய சேஞ்ச் 5 அங்கிருந்து கற்கள் மாதிரிகளை சேகரித்துக் கொண்டு 3ம் தேதி புறப்பட்டது. அங்கிருந்து பயணித்து சீனாவின் மங்கோலியா பகுதியில் நேற்று வெற்றிகரமாக தரையிரங்கியுள்ளது. சீனாவின் விண்வெளி ஆராய்ச்சியில் இந்த மாதிரிகளை சேகரித்த முயற்சி பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் முன்னமே நிலவில் மாதிரிகளை சேகரித்துள்ள நிலையில் 45 ஆண்டுகள் கழித்து நிலவில் மாதிரிகள் சேகரித்த மூன்றாவது நாடாக சீனா பட்டியலில் இணைந்துள்ளது.