Publish Date: Sun, 21 Aug 2022 (14:38 IST)
Updated Date: Sun, 21 Aug 2022 (14:39 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்தார் என்று கூறப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது
இந்த ஆணையம் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை செய்து வந்தது என்பதும், சமீபத்தில் இந்த ஆணையம் தனது விசாரணையை முழுமையான அளவில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் 500 பக்கங்கள் கொண்ட தனது விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளதாகவும் இந்த அறிக்கை இன்னும் ஓரிரு நாளில் தமிழக அரசிடம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆணையம் அமைக்கப்பட்டது என்பது அதன் பின் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது