Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம்: ஆங் சான் சூகி சிறைபிடிப்பு

Advertiesment
மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம்: ஆங் சான் சூகி சிறைபிடிப்பு
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (07:54 IST)
மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ராணுவம்
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஆங் சாங் சூகி சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மியான்மரில் கடந்த சில மாதங்களாக அரசியல் சூழ்நிலை பதட்டமாக இருந்த நிலையில் தற்போது திடீரென ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவம் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனை அடுத்து அந்நாட்டின் அதிகார தலைவராக இருந்து வரும் ஆங் சான் சூகி என்பவர் இராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி மியான்மர் நாட்டின் முக்கிய தலைவர்களும் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது
 
மியான்மர் நாட்டின் நடைபெறும் அரசியல் சூழல் குறித்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேற்று ஸ்டாலின், இன்று உதயநிதி: இந்துக்களே உஷார் என பிக்பாஸ் நடிகை டுவீட்