Publish Date: Thu, 29 Oct 2020 (16:32 IST)
Updated Date: Thu, 29 Oct 2020 (16:46 IST)
இந்திய ராணுவம் தகவல் பரிமாற்றத்துக்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ் ஆப் போன்ற ஒரு பாதுகாப்பான செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலி மூலம் செய்திகள், ஒலிகள் மற்றும் படங்களை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.