Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்…வலுக்கும் எதிர்ப்பு!

ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்…வலுக்கும் எதிர்ப்பு!
, சனி, 16 அக்டோபர் 2021 (10:41 IST)
சீனாவில் குரான் மஜீத் நூலை ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நூல் மற்றும் வழிகாட்டியாக சொல்லப்படுவது குரான். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் படிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் உலகில் இளைஞர்களுக்கு படிக்கும் வசதிக்காக டிஜிட்டல் வடிவில் மாற்றி குரான் மஜித் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த நூலை ஆப்பிள் நிறுவனம் நீக்கிவிட்டதாம். இது இஸ்லாமிய மக்கள் இடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சீன அதிகாரிகளின் உத்தரவை அடுத்தே இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்ததாகக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக் கான்!