Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறையில் இருக்கும் ஆர்யன் கானுக்கு 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பிய ஷாருக் கான்!

Advertiesment
BBC Tamil
, சனி, 16 அக்டோபர் 2021 (10:10 IST)
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் இப்போது விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேர் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆர்யன் கானுக்கு அவர் தந்தை சார்பாக வீட்டில் இருந்து உணவு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறை நிர்வாகம் அதை மறுத்தது. இந்நிலையில் சிறையில் உள்ள காண்டீனில் பொருட்கள் வாங்கிக் கொள்ள சிறைவிதிகளின் படி 4500 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பியுள்ளார். மேலும் வீடியோ கால் மூலமாகவும் குடும்பத்தினருடன் ஆர்யன் கான் பேசியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடன்பிறப்பே: திரை விமர்சனம்