Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பீதி… ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமிக்கும் அமேசான் !

கொரோனா பீதி… ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமிக்கும் அமேசான் !
, புதன், 18 மார்ச் 2020 (10:36 IST)
கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.

சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அமேசான் நிறுவனம் தற்போது ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது. மேலும் ஒரு மணிநேர சம்பளமாக 15 டாலருக்கு 17 டாலராக உயர்த்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமாகி நான்கே நாளில் தற்கொலை செய்துகொண்ட பெண் – கணவரிடம் மட்டும் சொன்ன காரணம் !