Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறைந்த வில் ஸ்மித்: விசாரணையை முடுக்கி விட்ட ஆஸ்கர் நிர்வாகம்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (11:04 IST)
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 

 
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
 
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம்  விசாரணையை தொடங்கியுள்ளது. 
 
முன்னதாக வில் ஸ்மித் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி மற்றும் கலிபோர்னியா சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments