Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு கோடை விடுமுறை இருக்கா? இல்லையா?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (10:50 IST)
மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில். 

 
கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பொதுத்தேர்வுகள் நேரடியாகவே நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் தேதியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். தேர்வுகள் மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் முடிவடையும். 
 
இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குறைந்த நாட்களே விடுமுறை வழங்கப்படுமென தெரிகிறது. இதனிடையே இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,
 
கொரோனா கால கட்டத்தில் தாமதமாக தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. அது முடிந்த பிறகு பாட திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட வேண்டும். எனவே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் தான் சொல்ல முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை.. மக்கள் பாதுகாப்புடன் இருங்கள்: டிரம்ப்

பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் ரூ.1.60 கோடி ரொக்கம் பறிமுதல்! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments