Publish Date: Wed, 14 Jul 2021 (19:20 IST)
Updated Date: Wed, 14 Jul 2021 (19:22 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானின் பொறியாளர்கள் சென்ற பேருந்து குண்டு வெடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அணை கட்டும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சீன பொறியாளர்கள் 8பேர் சென்ற பேருந்தில் குண்டு வெடித்து அனைவரும் உயிரிழந்தனர்.
சீன பொறியாளர்கள் சென்ற பேருந்தின் மீது குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து அந்நாட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.