Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு - மீட்புப்பணிகள் மேலும் தீவிரம்

தாய்லாந்து குகையிலிருந்து 4 சிறுவர்கள் மீட்பு - மீட்புப்பணிகள் மேலும் தீவிரம்
, திங்கள், 9 ஜூலை 2018 (08:34 IST)
கடந்த 15 நாட்களாக தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களில் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற பயிற்சிக்காக லுவாங் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது பெய்த கனமழையின் காரணமாக அவர்கள் மலையின் குகைக்குள் ஒதுங்கியுள்ளனர். கனமழையின் காரணமாக அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டனர்.
webdunia
10 நாட்களுக்கு பிறகு குகையில் சிக்கி கொண்டிருந்த கால்பந்து அணியின் சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் அவர்களை மீட்கும் பணி மிகவும் சிரமமாக கருதப்பட்டது. இதில் ஒரு பாதுகாப்பு வீரர் பலியானார்.
 
இந்நிலையில் நேற்று குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் பத்திரமாக மீட்க, மீட்புப் படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது தொண்டர்களை ஓபிஎஸ் இழுத்துவிட்டார்: தீபா குற்றச்சாட்டு