Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைச்சாலை சுவர் இடிந்து 281 கைதிகள் தப்பியோட்டம்! நைஜீரியா நாட்டில் பரபரப்பு..!

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (13:40 IST)
நைஜீரியாவில் சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, 281 கைதிகள் தப்பியோடியதாக  சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக நைஜீரியாவில் கனமழை தொடர்ந்ததால், மைடுகுரி நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் மைடுகுரி சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

சுவர் இடிந்ததையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த 281 கைதிகள் தப்பியோடியதாக தகவல் கிடைத்துள்ளது. போலீசார் உடனடியாக தலைமறைவான கைதிகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதன் விளைவாக, 7 கைதிகள் மட்டும் மீண்டும் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலையீட்டால் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் சந்திக்கும் புதிய சவால்

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா தவெக மாநாடு? முதல் கோணல் முற்றும் கோணல்?

மாட்டிறைச்சி சமைத்ததால் 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்களா? பரபரப்பு தகவல்..!

இந்தியாவுடன் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை: மாலத்தீவு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments