Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா: மீட்கப்படுவார்களா இந்திய மாணவர்கள்?

ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா: மீட்கப்படுவார்களா இந்திய மாணவர்கள்?
, சனி, 26 பிப்ரவரி 2022 (08:19 IST)
ருமேனியாவில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியாவின் முதல் விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டது. 

 
உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். 
 
இதனிடையே உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்தியர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன. தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது. அதன்படி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் தோல்வி: முறியடிக்கப்பட்டது எப்படி?