Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர் பதற்றம்: உக்ரைன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம்!

போர் பதற்றம்: உக்ரைன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம்!
, செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (14:36 IST)
இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை உக்ரைனுக்கு புறப்பட்டது.
 
உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.
 
இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் உக்ரைனுக்கு பயணிகள் விமானங்களை இயக்கி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடுக்கு கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை உக்ரைனுக்கு புறப்பட்டது.
 
200க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ட்ரீம்லைனர் பி-787 விமானம் இந்த சிறப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக! – ட்ரெண்டாகும் நாங்க வந்துட்டோம்னு சொல்லு!