Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைன் இந்தியர்கள் வெளியேற்றம்; பத்திரமாக கொண்டு வந்த ஏர் இந்தியா!

உக்ரைன் இந்தியர்கள் வெளியேற்றம்; பத்திரமாக கொண்டு வந்த ஏர் இந்தியா!
, புதன், 23 பிப்ரவரி 2022 (08:24 IST)
உக்ரைனில் போர் பதற்றம் எழுந்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்கள் சிலர் முதல்கட்டமாக இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை திரட்டி வருவதாலும், உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாலும் உக்ரைனில் போர் எழும் அபாயம் உள்ளது. இதனால் அங்குள்ள இந்தியர்களை வெளியேறுமாறு இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஒன்று நேற்று உக்ரைன் புறப்பட்டு சென்றது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் உக்ரைன் சென்ற விமானம் அங்கிருந்து 242 பயணிகளை அழைத்துக் கொண்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா வந்தடைந்தது. மேலும் அங்குள்ள இந்தியர்களை மீட்க இரண்டு முறை ஏர் இந்தியா விமானங்கள் உக்ரைன் செல்ல உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றி பெற்ற 3 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்!