Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெஸ்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

Advertiesment
Mexico
, வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:03 IST)
மெக்சிகோவில் இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 18 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலையில், 42  பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க  நாட்டின் எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது.

இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு  நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்பேருந்தில் பயணம் செய்தவர்களின் எத்தனை பேர் இந்திய வம்சாவளியினர் என தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் சாம்பியன் எக்ஸ் தொழில்நுட்ப மையம்!