Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப முடிவு!

மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க வீரர்களை அனுப்ப முடிவு!
, புதன், 3 மே 2023 (22:09 IST)
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்க நாட்டிற்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைவதைத் தடுக்க   நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
 

மெக்சிகோ நாட்டின் எல்லையிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய தினமும் அகதிகள் முயற்சிக்கின்றனர்.

இதைத்தடுக்க அமெரிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன் ஆட்சியில்தான் அதிகளவில் அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், மெக்சிகோ எல்லைக்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் 1500 பேரை அனுப்ப அதிபர் ஜோபைடன் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோபைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சனைகு முடிவு கட்ட கூடுதல் படையை மெக்சிகோவுக்கு அனுப்பியுள்ளார்.

தற்போது அனுப்பவுள்ள அமெரிக்க ராணுவ வீர்ர்கள் 90  நாட்கள் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மியான்மரில் 2153 அரசியல் கைதிகளுக்கு விடுதலை