Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து: 13 பேர் பலி

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (13:34 IST)
வியாட்நாமில் உள்ள ஹோசிமின் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 
 
ஹோசிமின் பகுதியில் உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஆறு வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது, இதில் மொத்தம் 22 மாடிகள் உள்ளன. இன்று அதிகாலை இந்த குடியிருப்பில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு வீட்டில் கொழுந்துவிட்டு ஏரிந்த தீ மிக வேகமாக அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியது. இதானல், அந்த குடியிருப்பு வாசிகள் வேகமாக படியின் மீது ஏறி மேல்மாடிக்கு சென்றனர்.
 
தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தினால் மொத்தம் 13-பேர் உயிரிழந்ததாகவும், பலரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
 
மேலும், வியாட்நாமில் 2016-ம் ஆண்டு மதுமான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பிறகு அங்கு ஏற்படும் மிகப்பெரிய தீ விபத்து இதுவாகும் என கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments