Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்: பொய் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது!

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்: பொய் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது!
, புதன், 23 ஜூன் 2021 (09:15 IST)
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்: பொய் கூறி பரபரப்பை ஏற்படுத்திய பெண் கைது!
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்று எடுத்ததாக பொய் கூறிய உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்ததாவும் அதில் ஏழு ஆண் குழந்தைகள் மூன்று பெண் குழந்தைகள் என்றும் செய்திகள் வெளியானது. இதனை அடுத்து ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்தது உலக சாதனையாக கருதப்பட்டது.
 
ஆனால் அந்த பெண்ணுக்கு தாங்கள் பிரசவம் பார்க்கவில்லை என அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை கூறியதை அடுத்து அந்த பெண்ணுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றதாக பொய் கூறி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த பெண்ணை தென்னாபிரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கு மனநிலை சரியில்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்: டெல்லியில் ஒருவர் கைது!