Publish Date: Thu, 01 Sep 2022 (19:13 IST)
Updated Date: Thu, 01 Sep 2022 (19:15 IST)
பாகிஸ்தானில் ஏற்கனவே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் 1000க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் அடுத்த சோதனையாக பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக பலுசிஸ்தான் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது
வெடிகுண்டு வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஆகியவை அடுத்தடுத்து சோதனையாக பாகிஸ்தானில் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது