Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா?

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (06:59 IST)
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.

தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments