Publish Date: Sun, 07 Oct 2018 (11:23 IST)
Updated Date: Sun, 07 Oct 2018 (12:17 IST)
காங்கோவில் பெட்ரோல் டேங்கர் லாரியால் எற்பட்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
காங்கோவில் பெட்ரோல் எற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த டேங்கர் லாரி வேறு ஒரு வாகனத்தின் மீது மோதியது. இதனால் டேங்கர் லாரி கடுமையாக வெடித்து சிதறியது.
இந்த பெரும் விபத்தால் 50 பேர் உடல் கருகி பலியானார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பலரது உடல்நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம் பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது