Publish Date: Sat, 06 Oct 2018 (09:32 IST)
Updated Date: Sat, 06 Oct 2018 (09:39 IST)
நம் நாட்டில் செல்பி எடுக்கும் மோகத்திற்கு அடிமையானவர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.செல்பி எடுத்துக்கொண்டு ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி அடச் சீ எனத் ’தலையில் அடித்துக்கொள்வது போல’ நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் ஒன்று நிலத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
ஆனால் விமானத்துக்குள் மிருந்த மூன்றுபேர் எந்த பாதிப்புக் இல்லாமல் தப்பித்தனர். இதாறிந்த அந்த ஊர் மக்கள் கையில் கொண்டு சென்ற செல்போன் கொண்டு செல்பி எடுத்தனர்.
ஆபத்தை உணராமல் மக்கள் வித்துக்குள்ளான விமானத்துக்கு அருகில் நின்று செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வெகுவாக பரவிவருகிறது.