Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை காவலர் ஜெகதீசனை கொலை செய்தவர்கள் இவர்கள்தான்

Webdunia
திங்கள், 7 மே 2018 (19:26 IST)
இன்று அதிகாலை நெல்லை அருகே காவலர் ஜெகதீசன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் கொள்ளையர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசனை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணணக்கு பின்னர் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
 
ஜெகதீசனை கொலை செய்த இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள நெல்லை காவல்துறை, 'நெல்லையில் காவலர் ஜெகதீசன் கொலை சம்பவத்தில் தேடப்படும் நபர்கள் இவர்கள்தான் என்றும், இவர்களை எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதால் வெகுவிரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments