Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை காவலர் ஜெகதீசனை கொலை செய்தவர்கள் இவர்கள்தான்

Webdunia
திங்கள், 7 மே 2018 (19:24 IST)
இன்று அதிகாலை நெல்லை அருகே காவலர் ஜெகதீசன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் கொள்ளையர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களை மட்டுமின்றி காவல்துறையினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசனை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணணக்கு பின்னர் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
 
ஜெகதீசனை கொலை செய்த இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள நெல்லை காவல்துறை, 'நெல்லையில் காவலர் ஜெகதீசன் கொலை சம்பவத்தில் தேடப்படும் நபர்கள் இவர்கள்தான் என்றும், இவர்களை எங்கு பார்த்தாலும் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருப்பதால் வெகுவிரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments